சென்னையில் 2016ஆம் ஆண்டு மழை வெள்ளத்துக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் மழை நீர் தேங்குவது தொடர் கதையாகிவருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டும் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
இதற்கு போதிய வடிகால் வசதிகள் மற்றும் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் ஒழுங்காக நடக்காததே காரணம் என்றும் சில பணிகள் முழுமையாக முடிக்கப்படாததும் முதன்மை காரணம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி சுற்றுலா நிகழ்வை மேயர் பிரியா தொடங்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் மழை நீர் தேங்கினாலும் உடனே அப்புறப்படுத்துவோம்” என்றார்.
இது குறித்து பேசிய அவர், “சென்னையில் இந்த ஆண்டு இரவு நேரங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எதாவது ஒரு பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்படவில்லை எனில் உடனடியாக இது குறித்து தெரிவிக்கவும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“