/tamil-ie/media/media_files/uploads/2023/06/Express-Image-19.jpg)
Source: Twitter/ @
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தொழில்நுட்ப பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வு மேற்கொண்டார் சென்னை மேயர் பிரியா.
கடந்த ஜூன் 19 ஆம் தேதி, இத்தாலி நாட்டின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் டாட் கோராடோ கிளினியை சந்தித்து காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய துணை மேயர், கூடுதல் ஆணையர் திரு.சங்கர்லால் குமாவத் இ.ஆ.ப.,மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். pic.twitter.com/8R3Q5LR5wh
— Priya (@PriyarajanDMK) June 19, 2023
இந்த பயணத்தை, சென்னை துணை மேயர் மகேஷ்குமார், சுகாதாரத் துறை கூடுதல் ஆணையாளர் சங்கர்லால் குமாவத் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் சென்னை மேயர் பிரியாவுடன் மேற்கொண்டனர்.
திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக இத்தாலி நாட்டில் உள்ள ரோம்நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்டு, திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தோம் pic.twitter.com/U5p7bRK1Uf
— Priya (@PriyarajanDMK) June 19, 2023
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஆலோசனைகள் பெற்றுக்கொண்ட குழு, இன்று காலை சென்னை திரும்பினார்கள்.
இந்நிகழ்வின் போது மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், கூடுதல் ஆணையர் திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். pic.twitter.com/Ii1QqLJ4b1
— Priya (@PriyarajanDMK) June 20, 2023
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திடக்கழிவு மேலாண்மை ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு முறையை கையாளுகிறார்கள். இத்தாலியில் பிளாஸ்டிகை கையால தனி பிளாண்ட் அமைக்கின்றனர். சென்னை மாநகராட்சியில் பிளாஸ்டிக் சவாலாக உள்ள நிலையில் முதலமைச்சருடன் இதுகுறித்து ஆலோசித்து இத்தாலியில் பயன்படுத்தும் முறையை இங்கு செயல்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும்", என்றார்.
மற்றும் Material Recovery Factoryயை பார்வையிட்டோம். இந்நிகழ்வின் போது மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், கூடுதல் ஆணையர் திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். pic.twitter.com/vH2P8B1Sln
— Priya (@PriyarajanDMK) June 22, 2023
திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து இன்று (22.06.23) ,ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் உள்ள நிறுவனத்தின் மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை தானியங்கி மூலம் தரம்பிரிக்கும் செயலாக்க முறை... pic.twitter.com/NUHgb2hrq6
— Priya (@PriyarajanDMK) June 22, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.