Advertisment

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 30% இடஒதுக்கீடு? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
insulting the woman during cross-examination in the partition case

சென்னை உயர் நீதிமன்றம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயர்த்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார்.

இந்த இட ஒதுக்கீட்டை, 30 சதவீதமாக உயர்த்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில பாரதீய சத்ரிய மகாசபா சார்பில், அதன் தேசிய துணை தலைவர் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

அதில், தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வரும் முன், 0.15 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது.

நடப்பு கல்வியாண்டில் 2,656 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதும், 500 மாணவர்கள் மட்டுமே 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்துள்ளனர். எஞ்சிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற முடியாத நிலை உள்ளது.

எனவே, நீட் தேர்வில் தகுதி பெற்ற 2,656 மாணவர்களும் சேர்க்கை பெறும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இடஒதுக்கீட்டை 30 சதவீதமாக அதிகரிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment