'பானை'யை போராடி மீட்ட திருமா: துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

தி.மு.க கூட்டணியில் திருச்சியில் போட்டியிடும் வைகோவின் ம.தி.மு.க-வுக்கு தீப்பெட்டி சின்னமும், சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனின் வி.சி.க-வுக்கு பானை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க கூட்டணியில் திருச்சியில் போட்டியிடும் வைகோவின் ம.தி.மு.க-வுக்கு தீப்பெட்டி சின்னமும், சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனின் வி.சி.க-வுக்கு பானை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
 MDMK Durai Vaiko match box and VCK Thol Thirumavalavan pot Symbols for Loka sabha polls 2024 Tamil News

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

க.சண்முகவடிவேல்

Mdmk | Vck | Dmk | Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் ம.தி.மு.க இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக களமிறங்கியுள்ளார். 

Advertisment

திருச்சியில் தனி சின்னத்தில் போட்டியிடப்போவதாக ம.தி.மு.க அறிவித்திருந்த நிலையில், தங்களுக்கு பம்பரம் சின்னம் வழங்கவேண்டும் என அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் ஆணையர் பம்பரம் சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்தை ம.தி.மு.க தலைமை நாடியது. நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. அதன் பின்னரும் பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் முன்வராததால் ம.தி.மு.க-வினர் அதிர்ச்சியடைந்தனர். பா.ஜ.க-வின் அழுத்தமே தங்களுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதுக்கு காரணம் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி தினம் என்பதால், இன்று மாலை தேர்தல் ஆணையத்தால் வேட்பாளர் இறுதி செய்வது, சின்னங்கள் பொறுத்தும் பணிகள் தொடங்குவது என மும்முரம் ஆகியிருக்கின்றது. இந்த சூழலில், ம.தி.மு.க கட்சிக்கு அவர்கள் 2-ம் பட்சமாக கேட்ட தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்குவதாக இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

Advertisment
Advertisements

வி.சி.க-வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட் வேட்பாளர்களுக்கு 'பானை' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. வி.சி.க சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். வி.சி.க சார்பில் விழுப்புரம் மக்களவை தொகுதியில் சிட்டிங் எம்.பி ரவிக்குமார் போட்டியிடுகிறார். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Dmk Vck Mdmk Lok Sabha Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: