/indian-express-tamil/media/media_files/IKQEpdiyepFIffdSGA2O.png)
ம.தி.மு.க எம்.பி தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி அக்கட்சி தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Mdmk | Erode | 2019 நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ம.தி.மு.க சார்பில் ஈரோடு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கணேச மூர்த்தி.
இவர் கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி. ஆக இருந்து வருகிறார். தற்போது தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அக்கட்சி சார்பில் துரை வைகா போட்டியிடுகிறார். இந்த நிலையில் கணேச மூர்த்தி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அவர் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தியும் பரவி வருகிறது. இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ம.தி.மு.க. உருவானதில் இருந்து கணேச மூர்த்தி அக்கட்சியில் உள்ளார். 2016ஆம் ஆண்டு இவர் கட்சியின் பொருளாளராக வைகோவால் நியமிக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.