/indian-express-tamil/media/media_files/HiU3isurJQlzgTcTMzPi.jpg)
திருச்சி தேர்தல் பணிமனை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வைகோ ம.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
க.சண்முகவடிவேல்
Mdmk Chief Vaiko | Trichy | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் வைகோவின் இந்தியா கூட்டணி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.
இந்தியா கூட்டணியில் அங்கும் வகிக்கும் காங்கிரஸ் தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில், ம.தி.மு.க இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. திருச்சி தேர்தல் பணிமனை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கூடங்குளம் அணுமின் நிலையம் மூடல் உள்ளிட்ட 74 வாக்குறுதிகளை வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திராவிட மாடல் அரசை இந்தியாவிற்கே முன்மாதிரியாக எடுத்துச் செல்கிறார்" என தெரிவித்தார்.
திருச்சி தொகுதியில் மதிமுக வெற்றிக்காக பணியாற்றி வரும் தி.மு.க அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.