தமிழகத்தில் அடுத்த 2 நாள்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 2 நாள்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 2 நாள்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rain (1)

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று தற்போது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது மேலும் வலுவடைந்து நாளை தீவிர புயலாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இது நடப்பு ஆண்டின் 3-வது புயல் என்றும், இதற்கு டாணா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, டாணா புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது

Advertisment
Advertisements

மேலும், புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Weather Forecast Report Chennai Weather Report

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: