ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்: புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றவரை வளைத்த போலீஸ்

புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
kaithu

நாகப்​பட்​டினம் மாவட்டம் விழுந்தமாவடியைச் சேர்ந்தவர் எம்​. அலெக்​ஸ்​. இவர், போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரி​வினருக்கு தகவல் கிடைத்​தது.

Advertisment

இதையடுத்​து, அவரை கடந்த ஒரு வார​மாக போலீ​ஸார் கண்​காணித்து வந்​தனர். இதனிடையே, அவர் புதுக்கோட்டை வழி​யாக இலங்​கைக்கு படகு மூல​மாக போதைப்​பொருட்​களைக் கடத்தி செல்​ல​விருப்​ப​தாக தகவல் கிடைத்தது.

இந்​நிலை​யில், புதுக்கோட்டை மேல​விலக்​குடி​யில் இருந்த அலெக்ஸை இரு தினங்களுக்கு முன் கைது செய்த மத்​திய போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸார், அவரிட​மிருந்த 950 கிராம் எடை​யுள்ள, ரூ.8 கோடி மதிப்பிலான மெத்​தம்​பெட்​டமைன் என்ற போதைப் பொருளை​யும், ரூ.2 லட்​சம் ரொக்​கத்​தை​யும் பறிமுதல் செய்​தனர்.

பின்​னர், புதுக்​கோட்டை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் அலெக்ஸை நேற்று முன்​தினம் ஆஜர்​படுத்​தி, சிறை​யில் அடைத்​தனர். தற்​போது கைதாகி​யுள்ள அலெக்ஸ் மீது பல்​வேறு மாநிலங்களில் இருந்து இலங்​கைக்கு போதைப்​பொருள் கடத்​தி​யது தொடர்​பான வழக்​கு​கள் நிலுவை​யில் இருப்​ப​தாக போலீஸார்​ தெரி​வித்தனர்​.

Advertisment
Advertisements


க.சண்முக வடிவேல்

Pudukottai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: