ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கார் கவிழ்ந்து விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

மேட்டுப்பாளையத்தில் கார் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாகச் சென்று சுவற்றில் மோதிக் கவிழ்ந்தது.

மேட்டுப்பாளையத்தில் கார் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாகச் சென்று சுவற்றில் மோதிக் கவிழ்ந்தது.

author-image
WebDesk
New Update
Cbe car accident

நீலகிரி மாவட்டம் ஊட்டி, எமரால்டு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (48) என்பவர், இன்று காலை அவிநாசிக்கு செல்வதற்காக காரில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என மேலும் இருவருடன் மேட்டுப்பாளையம் வழியாக பயணித்துக் கொண்டிருந்தார். இந்த கார் அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் ஈஸ்வரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

Advertisment

இதனால் நிலை தடுமாறிய கார், அதிவேகமாகச் சென்று சாலையோரத்தில் இருந்த சிறிய பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சுமார் 10 அடிக்கும் மேல் தூக்கி வீசப்பட்டது. இதைத் தொடர்ந்து, சாலையோரம் இருந்த சக்தி தியேட்டரின் சுவற்றில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. அதேசமயம், சாலையோரம் நடந்து சென்ற ஒரு முதியவரும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர் தப்பினார்.

அக்கம்பக்கத்தினர் உடனடியாக காரில் இருந்த மூவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினர்.

Advertisment
Advertisements

 

 

இந்தச் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: