Advertisment

மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து 17 பேர் பலியான வழக்கு; சிவசுப்ரமணியத்துக்கு நிபந்தனை ஜாமீன்

மேட்டுபாளையம் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 17 பேர் மரணமடைந்த வழக்கில் நில உரிமையாளர் சிவ சுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mettupalayam wall collapse 17 death, mettupalayam wall collapse 17 death case, மேட்டுப்பாளையம், சுவர் இடிந்து 17 பேர் பலி, mettupalayam wall collapse accused sivasubramaniam gets bail, சிவசுப்ரமணியம், நிபந்தனை ஜாமீன், sivasubramaniam gets bail, mettuapalayam, சென்னை உயர் நீதிமன்றம், Madras high court

mettupalayam wall collapse 17 death, mettupalayam wall collapse 17 death case, மேட்டுப்பாளையம், சுவர் இடிந்து 17 பேர் பலி, mettupalayam wall collapse accused sivasubramaniam gets bail, சிவசுப்ரமணியம், நிபந்தனை ஜாமீன், sivasubramaniam gets bail, mettuapalayam, சென்னை உயர் நீதிமன்றம், Madras high court

மேட்டுபாளையம் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 17 பேர் மரணமடைந்த வழக்கில் நில உரிமையாளர் சிவ சுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக, சிவசுப்பிரமணியம் என்பவரின் வீட்டின் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் வசித்த 17 பேர் பலியாகினர்.

டிசம்பர் 2 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது மேட்டுப்பாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்து கடந்த 3 ஆம் தேதி கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையின் காரணமாகவே மண் சரிந்து வீட்டின் சுற்றுசுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்தது.

எந்த உள் நோக்கத்துடன் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை என்பதால், தனக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி விசாரித்து தீர்ப்பை தள்ளிவைத்து இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்பளித்த நீதிபதி சிவசுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்த்தரவிட்டார்.மேலும், 1 லட்சம் ரூபாய் பிணைத்தொகையும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டுமெனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கி இருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Madras High Court Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment