ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை; 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடகாவில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, நடப்பாண்டில் 2 மாதங்களில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, நடப்பாண்டில் 2 மாதங்களில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
mettur dam

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதன் விளைவாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக, கடந்த ஜூன் 29-ம் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. Photograph: (IE Tamil)

கர்நாடகாவில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, நடப்பாண்டில் 2 மாதங்களில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதன் விளைவாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக, கடந்த ஜூன் 29-ம் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அப்போதிலிருந்து, அணைக்கு வந்த நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையே, அணைக்கான நீர்வரத்து சற்றே சரிந்து, கடந்த ஜூலை 3-ம் தேதி நீர்மட்டம் 119.91 அடியாகக் குறைந்தது. எனினும், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டதையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து, நேற்று மாலை நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியது. நடப்பாண்டில் அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து 51,501 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Advertisment
Advertisements

இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக இருந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆறு மற்றும் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து அமலில் உள்ளது.

Mettur Dam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: