Mettur Dam: மேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது, இதனால் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 8-ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியதுகபினி அணை. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது, இந்த நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதால் தற்போது கபினி அணியில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
2-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால் ஒகேனக்கல்லில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், இந்த ஆண்டு 2-ஆவது முறையாக அணை நிரம்பியுள்ளது.
இந்நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி நீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆற்றங்கரை அருகில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 45-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Mettur dam water released
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்