Advertisment

டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் இருந்து 2500 கன அடி தண்ணீர் கூடுதலாக திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
Mettur Dam

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 18,384 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 15,929 கனஅடியாக குறைந்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் திறப்பை விட, தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 96.90 அடியாகவும், நீர் இருப்பு 60.89 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 4 நாட்களாக விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று மாலை விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mettur Dam Cauvery River
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment