Advertisment

சட்டப்பேரவைக்குள் குட்கா; எம்.எல்.ஏ.க்கள் மீது சிறப்பு மீறல் நடவடிக்கை: ஐகோர்ட்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் 17 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் சட்டசபைக்கு திருப்பி அனுப்பினர்.

author-image
WebDesk
New Update
Secretariat I

சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகும் எம்எல்ஏக்கள் மீதான சிறப்புரிமை மீறல் நடவடிக்கைகள் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

2017 ஜூலையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் குட்கா பேக்கேஜ்களை காட்சிப்படுத்தினர். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் மற்றும் 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தனி நீதிபதி, திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பிய காரணம் நோட்டீஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தை தற்போதைய சபாநாயகர் மற்றும் சிறப்புரிமைக் குழுவுக்குத் திருப்பி அனுப்பியது.

Advertisment

2021-ம் ஆண்டு மே மாதம் கலைக்கப்பட்ட 15-வது சட்டப் பேரவையின் போது தொடங்கப்பட்ட நடவடிக்கைகளை தற்போதைய 16-வது சட்டப்பேரவைக் காலத்தில் தொடர முடியாது என்ற திமுக எம்எல்ஏக்களின் வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 31, 2024) புதன்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) மீது தொடங்கப்பட்ட சிறப்புரிமை மீறல் நடவடிக்கைகள், சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின்னரும் தொடரலாம் என்று தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட பேரவையின் பதவிக்காலம் முடிவதோடு, அவை நடவடிக்கைகள் காலாவதியாகிவிட்டதாக கருதினால், சபைக்கு சில சலுகைகளை வழங்குவதன் நோக்கம் அர்த்தமற்றதாகிவிடும். சட்டத்தை அப்படி விளக்கினால், எம்எல்ஏக்கள் சிறப்புரிமைகளை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Chenai High Court CM stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment