மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று புறப்படும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள மிக்ஜாம் புயல் இன்று வடகடலோர மாவட்டங்களை நெருங்கிச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது.
இதனால் சென்னை- மைசூரு சதாப்தி, சென்னை – கோவை விரைவு ரயில், சென்னை – கோவை சதாப்தி, சென்னை – பெங்களூரு ஏசி டபுள் டக்கர், சென்னை – பெங்களூரு பிருந்தாவன், சென்னை – திருப்பதி சப்தகிரி ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் கனமழையால் சைதாப்பேட்டை-அரங்கநாதன் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம், பழவந்தாங்கல், தில்லைநகர், சி.பி.சாலை, வில்லிவாக்கம், வியாசர்பாடி, செம்பியம், கணேசபுரம் ஆகிய இடங்களில் உள்ள 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“