மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடற்கரையோர பகுதிகளிலும் தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் புயலின் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகள் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் வெளியில் வர வேண்டாம் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அரசு அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். மீட்புபணி துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் கோவை சென்னை இடையிலான வியாசர்பாடி இடையே உள்ள ரயில் பாலத்தில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை - கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ் , சென்னை - கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை கோவை ரயில் நிலையத்திற்கு வந்த சென்னை செல்லும் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“