Advertisment

மணிக்கு 10 கி.மீ வேகம்; சென்னை- தெற்கு ஆந்திரா கடற்கரைக்கு இணையாக புயல் நகர்கிறது: பாலச்சந்திரன் பேட்டி

இன்று இரவு வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sdsae

இன்று இரவு வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

புயல் தொடர்பாக  தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட வீடியோவில் ” மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கில் சுமார் 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

அதன்பிறகு வட தமிழகம்- தெற்கு ஆந்திர கரைக்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூருக்கும் - மசுலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு வரை மழையும், பலத்த காற்றும் தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment
Advertisement

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment