/indian-express-tamil/media/media_files/2iKNJQcT4rrjCjcwOGv6.jpg)
பொதுமக்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண்கள் அறிவிப்பு
தமிழகத்தில் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவிக்கான தொடர்பு எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. புயல் பாதிப்பு குறித்து, பொதுமக்கள் '1077' என்ற எண் மூலம் அவசரகால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 290 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் டிசம்பர் 5-ம் தேதி காலை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 'மிக்ஜம்' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் இன்று (டிசம்பர் 03) மாலை முதல் படிப்படியாக மழை அதிகரித்து நாளை (டிசம்பர் 4) மாலை வரை கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவிக்கான எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புயல் பாதிப்பு குறித்து '1077' என்ற எண் மூலம் அவசரகால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை '1070' என்ற எண் மூலமாகவும், வாட்ஸ் ஆப் எண் - 9445869848 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். புயல் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.