மதவாத பாசிச அரசியலை எதிர்க்க எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் – மனோ தங்கராஜ்

பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது – அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட மனோ தங்கராஜ் பதிவு

பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது – அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட மனோ தங்கராஜ் பதிவு

author-image
WebDesk
New Update
Mano Thangaraj

சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக அமைச்சரவை மாற்றத்தில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக 2021 முதல் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த மனோ தங்கராஜ், 2023 ஆம் ஆண்டில் பால்வளத் துறைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில், இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து எனது பணிகளுக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது; “2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது. 

Advertisment
Advertisements

2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி! 

மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்.” இவ்வாறு மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mano Thangaraj Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: