திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இன்று 20க்கும் மேற்பட்டோருடன் லோடு ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவின் முன் பக்க சக்கரம் வெடித்ததால், நிலைத் தடுமாறிய ஆட்டோ, சாலையின் அருகில் இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிலர், கோவில் திருவிழாவிற்காக லோடு ஆட்டோவில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மேலும் படிக்க - தமிழகத்தில் இன்று நடக்கும் முக்கிய அப்டேட்டுகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்