பள்ளி கல்வித் துறைக்காக ரூ. 44 ஆயிரம் கோடி நிதி - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழகத்தில் முன்பு இல்லாத அளவிற்கு பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 44,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முன்பு இல்லாத அளவிற்கு பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 44,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Min anbil event

கோவை, கவுண்டம்பாளையம் குடியிருப்பு மனை அரசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

Advertisment

இப்பள்ளியை மார்ட்டின் குழுமம் தத்தெடுத்து, ரூ. 7 கோடி செலவில் புனரமைத்து, புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், நுழைவு வாயில், விளையாட்டு மைதானம், கலையரங்கம் உள்ளிட்டவைகளை கட்டி தந்துள்ளனர். மேலும் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள், வகுப்பறைகளில் மேசை நாற்காலிகள், சுற்றிலும் மரக்கன்றுகள் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்து உரையாற்றினார்.

விழாவில் பேசிய அவர், "தமிழக வரலாற்றிலேயே முன்னர் இல்லாத அளவிற்கு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 44,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்கி சி.எஸ்.ஆர் பங்களிப்பை தொடங்கி வைத்த நிலையில், இன்று வரை சுமார் ரூ.455 கோடி வரை சேர்ந்துள்ளது" எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஆசிரியர்களுக்கு எம்.எஸ் பணிகள் கொடுப்பதால் பணிச்சுமை அதிகமாக உள்ளது என்ற கேள்விக்கு, புதிதாக 6 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் பணியை மட்டுமே மேற்கொள்வதாக தெரிவித்தார். மேலும், அமரன் திரைப்படம் அனைத்து பள்ளிகளிலும் திரையிடப்பட வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு அது அவரது கருத்து என தெரிவித்தார்

Advertisment
Advertisements

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  கோவை மாநகர மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாட்டின் குழும இயக்குனர்  லீமா ரோஸ் மார்ட்டின், நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் திரைப்பட நடிகர் ஆரி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி - பி.ரஹ்மான்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: