Advertisment

கோட்டையில் உதயநிதிக்கு தயாராகும் அறை: பார்வையிட்ட அன்பில் மகேஷ்

அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்; கோட்டையில் பிரத்யேகமாக தயாராகி வரும் அறையை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news updates

உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், கோட்டையில் அவருக்காக பிரத்யேகமாக தயாராகி வரும் அறையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

Advertisment

கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக முதல்வராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்தத் தேர்தலில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக களம் இறங்கினார். சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார் உதயநிதி. தி.மு.க பெரும்பான்மை இடங்களை பிடித்த ஆட்சி அமைத்த நிலையில், அப்போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், அப்போது அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்: உதயநிதி பதவியேற்பு: 400 பேருக்கு அழைப்பு; இ.பி.எஸ் பங்கேற்பாரா?

அப்போதிருந்தே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். உதயநிதியை அமைச்சர் ஆக்க வேண்டும் என அமைச்சர்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் (நவம்பர்) 27-ம் தேதி உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களில் பேசிய சில அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், அவருக்காக கோட்டையில் பிரத்யேகமாக புதிய அறை தயாராகி வருகிறது. கோட்டையின் இரண்டாவது தளத்தில் உள்ள அந்த அறையில் வண்ணம் பூசும் பணிகள், எல்ட்ரிக் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அறையை உதயநிதியின் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பார்வையிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Udhayanidhi Stalin Anbil Mahesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment