/tamil-ie/media/media_files/uploads/2017/09/z353.jpg)
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையே கதி என்று இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும், ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். ஜெயா டிவியில் பழைய பாடல்கள் கேட்டார். இன்று இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் கூறினார்கள்.
70 நாட்களுக்கும் மேலாக அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி இரவு 11:30 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால், தற்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் "நாங்கள் கூறிய அத்தனையும் பொய். இட்லி சாப்பிட்டார் என்றது, அவரைப் பார்த்தோம் என்று சொன்னது எல்லாம் பொய். யாருமே ஜெயலலிதாவை பார்க்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் பேசிய அந்த வீடியோ இங்கே...
September 2017அப்பலோவில் ஜெயலலிதாவை சந்திக்க சசிகலாவை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை: திண்டுக்கல் சீனிவாசன் #Srinivasanhttps://t.co/Dq9KLKFxWM
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews)
அப்பலோவில் ஜெயலலிதாவை சந்திக்க சசிகலாவை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை: திண்டுக்கல் சீனிவாசன் #Srinivasanhttps://t.co/Dq9KLKFxWM
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 23, 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.