"ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக சொன்னதெல்லாம் பொய்" - மன்னிப்புக் கேட்ட அமைச்சரின் வீடியோ!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
"ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக சொன்னதெல்லாம் பொய்" - மன்னிப்புக் கேட்ட அமைச்சரின் வீடியோ!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையே கதி என்று இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும், ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். ஜெயா டிவியில் பழைய பாடல்கள் கேட்டார். இன்று இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் கூறினார்கள்.

Advertisment

70 நாட்களுக்கும் மேலாக அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி இரவு 11:30 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால், தற்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் "நாங்கள் கூறிய அத்தனையும் பொய். இட்லி சாப்பிட்டார் என்றது, அவரைப் பார்த்தோம் என்று சொன்னது எல்லாம் பொய். யாருமே ஜெயலலிதாவை பார்க்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் பேசிய அந்த வீடியோ இங்கே...

Advertisment
Advertisements
September 2017

Minister Dindugal Srinivasan Dhinakaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: