New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/16/7ULTd6fyjuMl5ffPmCzO.jpg)
ஆரஞ்சு போட்டாலும் சரி ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும் என ஏரியை ஆய்வு செய்தபின் அமைச்சர் துரைமுருகன் கலகலப்பாக பேட்டி அளித்தார் .
தொடர் மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் 21 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
எரிக்கான நீர்வரத்து தற்போது குறைந்துள்ளதால் உபரிநீர் திறப்பு 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (டிச.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குப்பை மற்றும் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதை மக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக தடுப்பணைகள் கட்டப்படும். கூடுதலாக நிதியை பெற்று எஞ்சிய சில நீர்நிலைகளும் தூர்வாரப்படும்" என்றார்.
தொடர்ந்து அவரிடம் மீண்டும் மழை வருவதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது செம்பரம்பாக்கம் ஏரி தாங்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ஆரஞ்சு போட்டாலும் சரி ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.