Advertisment

யாருக்கு எந்தத் தொழில் வருமோ? அமைச்சர் துரைமுருகன் அடுத்த சரவெடி!

'யாருக்கு எந்தத் தொழில் செய்ய தெரியுமோ அந்தத் தொழிலை தான் அவர்கள் செய்வார்கள்" என அமைச்சர் துரைமுருகன் கூறினார். இன்று துரைமுருகன் விக்கிரவாண்டியில் வாக்கு சேகரித்தார்.

author-image
WebDesk
New Update
minister durai murugan, today news,

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

“யாருக்கு எந்தத் தொழில் செய்ய  தெரியுமோ அந்தத் தொழிலை தான் அவர்கள் செய்வார்கள்” என விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு சேகரிக்கும் போது செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்னும் எட்டு நாட்கள் உள்ளது. திமுகவினர் எப்போது என் முகாமிட்டு கடுமையாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அமைச்சர்கள் பொன்முடி. சேகர் பாபு பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (02 ஜூலை 2024) விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைச்சர் துரைமுருகன் வாக்கு சேகரித்தார் அப்பொழுது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிகப்பெரும் பிரகாசமாக உள்ளது. இத்தொகுதியில் சீனியர் அமைச்சர் பொன்முடி மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோர் ஒருங்கிணைந்து கட்டுக்கோப்பாக தேர்தல் பணியை மாற்றி வருகின்றன இது திமுகவிற்கு வெற்றி வாய்ப்பை நன்கு தெளிவாக தெரிகிறது. மேலும் தமிழக முதலமைச்சர் திட்டங்கள் அடிமட்டல் மக்கள் வரை சென்றடைந்துள்ளன எனவே திமுக வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.

நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பும் போது பாமகவினர் பல்வேறு இடங்களில் மோதல் போக்கை உருவாக்குகின்றனர் நேற்று கூட திமுகவினரிடம் தவறான செய்துள்ளனர் என கேள்வி எழுப்பினார் அதற்கு அமைச்சர் பதில் கூறியதாவது யார் யாருக்கு எந்தெந்த தொழில் தெரியுமா அந்த தொழிலை தான் அவர்கள்  செய்கின்றனர்" என்றார்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Durai Murugan Vikravandi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment