/indian-express-tamil/media/media_files/BMIRtafr5P5DHhSvAvqO.jpg)
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு முறைகேடாக ஒதுக்கியதாக இவர் மீது வழக்கு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, அமைச்சர் ஐ.பெருயசாமியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இந்நிலையில் பிப்ரவரி 13ம் தேதி இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளார். அமைச்சர் ஐ.பெரிய சாமி வழக்கை மீண்டும் விசாரிக்க எம்.பி., எம்.எல்.ஏ நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தினமும் விசாரணை நடத்தி வரும் ஜூலைக்குள் வழக்கை முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 28-க்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த ஐ.பெரியசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி ஆஜராகாவிட்டால் சமந்தப்பட்டவர்களுக்கு எதிராக பிடிவரண்ட் பிறப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.