தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக-வை எதிர்த்து முழக்கமிட்ட மாணவி சோபியாவின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும், எதிர்ப்பை வெளிப்படுத்த இடம், பொருள் உண்டு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சோபியா பின்னணி மீது எனக்கு சந்தேகம் உள்ளது - தமிழிசை
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், சோபியா கைது விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், விமானத்திலோ, விமான நிலையத்திலோ ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை ஏற்க முடியாது என்று கூறினார்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விமான நிலையத்தில் சோபியா இப்படி செய்யலாமா? என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், விளம்பரத்திற்காக தன்னை முன்னிலைப்படுத்த சில இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க: சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்
ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடைபெறும் போது அதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. சோபியாவின் செயல்பாடுகளை அனுமதித்தால் விமான நிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.
பாஜக-விற்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா மீது தமிழிசை சௌந்திரராஜன் வழங்கிய புகாரில் முகாந்திரம் இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.