வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசுக்கு சிபிஎஸ்இ தெரிவிக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டியில், "மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் ஒதுக்கப்படவில்லை. வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசுக்கு சிபிஎஸ்இ தெரிவிக்கவில்லை. மாணவ, மாணவிகளுக்கு தேவையான நிதி உதவியை அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வெழுத வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். சிபிஎஸ்இ நிர்வாகம் முன்னதாகவே தெரிவித்து இருந்தால், தமிழகத்திலேயே நீட் தேர்வுகள் மையங்களை அமைத்திருக்க முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.