நீட் பொது கலந்தாய்வால் அரசு பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடு பறிபோகும்: அமைச்சர் மா.சு எச்சரிக்கை

"மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்" - அமைச்சர் மா.சுப்ரமணியன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister M Subramanian

நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணி கூறியுள்ளார்.

Advertisment

சென்னை மருத்துவக் கல்லூரியின் 187வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியபோது, இந்தாண்டு பொது கலந்தாய்வு வருவதற்கு வாய்ப்பு இல்லை. பொது கலந்தாய்வு கொள்கையை மத்திய அரசு கைவிடாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், "பொது கலந்தாய்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். அதிகளவு மருத்துவ கல்வி இடங்களை வைத்துள்ள தமிழகத்தில், தமிழர்கள் அல்லாத பிற மாநிலத்தவர்கள் பயன்பெறுவர்.

இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழகம் தான். நீட் தேர்வில் இருந்து விளக்கு கிடைக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது", என்று கூறினார்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Ma Subramanian 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: