/tamil-ie/media/media_files/uploads/2022/10/Untitled-design-28-1.jpg)
பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இதையடுத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், அவர்கள் சட்டத்தை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்களா என்று விசாரணை நடத்துவதாக அறிவித்தார்.
தற்போது, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2016ஆம் ஆண்டிலேயே தங்களுக்கு பதிவு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.
இதனால், அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: "மகப்பேறு மருத்துவர்கள் இருவர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு இந்த விசாரணைக்கு நியமித்திருக்கிறோம். முழு அறிக்கை பெற்ற பிறகு விதி மீறல்கள் நடைபெற்றதை என்ற சந்தேகம் தீர்ந்துவிடும். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிப்போம்" என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.