/tamil-ie/media/media_files/uploads/2022/10/Untitled-design-32.jpg)
அமைச்சர் மா. சுப்ரமணியன்
சமீபத்தில், தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதற்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதிலளித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "இது தவறான தகவல் என்று எனது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறேன். தூய்மைப்பணியாளி நோயாளி ஒருவரை சுத்தம் செய்ய உதவியதை வீடியோ பிடித்து மக்களின் மத்தியில் பகிர்ந்துள்ளனர்.
இதனால், மக்களின் மத்தியில் அரசு மருத்துவமனையின் மேல் உள்ள நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. மேலும், மருந்து தட்டுப்பாடு இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுந்தால் மதுரையில் உள்ள மருந்து கிடங்கிற்கு சென்று பரிசோதித்து பார்த்துக்கொள்ளலாம்.
பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டதைப் பற்றி விசாரணை மேற்கொள்ள படுகிறது. ஏதேனும் சட்ட மீறல் நிகழ்ந்திருந்தால், அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்", என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.