ஆகஸ்ட் 1 முதல் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்

நாளை (ஆக.1) முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

நாளை (ஆக.1) முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
lifestyle

தக்காளி விலை கிலோ ரூ.200 வரை விற்பனையாகிவருகிறது.

நாடு முழுக்க விளைச்சல் பாதிப்பு, தேவை அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை திடீர் உயர்வை சந்தித்தது. இதனால் கிலோ தக்காளி ரூ.180 முதல் ரூ.240வரை விற்பனையானது.

Advertisment

தற்போதுவரை தக்காளி விலை கிலோ ரூ.150 வரை விற்பனையாகிவருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதனை எதிர்க்கொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரேஷனில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆக.1ஆம் தேதி முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.

முதல் அமைச்சரின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், தக்காளி விலை உயர்வுக்கு உற்பத்தி சரிவே காரணம் எனவும் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: