பேருந்தில் பெண்கள் ஓ.சி-யில் செல்கிறார்கள்…. விளையாட்டாக பேசினேன் – அமைச்சர் பொன்முடி விளக்கம்

அரசுப் பேருந்தில் பெண்கள் ஓ.சி-யில் செல்கிறீர்கள் என்று அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையான நிலையில், தான் விளையாட்டாகப் பேசியதை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பெண்கள் ஓ.சி-யில் செல்கிறார்கள்…. விளையாட்டாக பேசினேன் – அமைச்சர் பொன்முடி விளக்கம்

அரசுப் பேருந்தில் பெண்கள் ஓ.சி-யில் செல்கிறீர்கள் என்று அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையான நிலையில், தான் விளையாட்டாகப் பேசியதை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“தமிழ்நாடு பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 14,153 பேர் தயாராக உள்ளனர். பொறியியல் சேவையில் சேர்வதற்கான எண்ணிக்கை 5,016. 10,351 மாணக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்து விட்டார்கள். அக்டோபர் 13ம் தேதி 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கலந்தாய்வில் அதிக மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். நான்கு சுற்றுகளும் நிறைவடைந்ததும் முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும். பொறியியல் சேர்க்கையில் இந்த வருடம் எந்த ஒரு பிரச்சினைகளும் இருக்காது. சிறப்பாக நடைபெறும்.
பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும். அக்டோபர் 8ம் தேதி கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும். 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் இறுதியில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.

நீட் தேர்வு போன்ற காரணங்களால் பொறியியல் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் துவங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிலேயே கலை அறிவியல் கல்லூரியில் சேர்ப்பதற்கு அந்தந்த கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள், அமைச்சர் பொன்முடியிடம், மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தைக் குறிப்பிட்டு, பெண்களெல்லாம் `ஓசில பயணம் செய்றீங்க என அவர் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, அது விளையாட்டாக சொன்னதுதான். அதை பெரிதுபடுத்த தேவையில்லை என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister ponmudi answers for his controversy speech about free bus for women in tamilnadu

Exit mobile version