/indian-express-tamil/media/media_files/RI5R2QLZqvj51SL6RGY2.jpg)
தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006 -11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்குசொத்து சேர்த்ததாக அவரும் அவரது மனைவி விசாலாட்சிஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 2011ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது ?
விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் விழுப்புரம் மாவட்டம் ஊழல் தடுக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு 2015ம் ஆண்டு மாற்றப்பட்டது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரையும் விடுதலை செய்து 2016ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி தீர்ப்பு அளித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, எதிர் தரப்பு, அமைச்சர் பணத்தை மனைவிடம் கொடுத்து சொத்து வாங்க சொன்னதற்கு சரியான ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. மேலும் பொன்முடி மனைவிக்கு விவசாயம் மற்றும் சிறு தொழில் செய்வதன் மூலம் பணம் கிடைக்கிறது என்று சுட்டிக்கட்டப்பட்டது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி டி. சுந்தரமூர்த்தி ஏ2 குற்றவாளியான மனைவி விசாலாட்சியிடம், ஏ1 குற்றவாளியான பொன்முடி பணம் கொடுத்து சொத்துக்களை வாங்கினார் என்பதற்கு சரியான ஆதாரங்களை எதிர்தரப்பு வழங்வில்லை” என்று தெரிவித்தார்.
லஞ்சஒழிப்புதுறைஇந்த தீர்ப்புக்கு எதிராக எப்போது வழக்கு தொடர்ந்தது?
இந்த தீர்ப்பை எதிர்த்துசென்னை உயர்நீதிமன்றத்தில் லட்ச ஒழிப்பு துறை சார்பில் கடந்த 2017ம் ஆண்டு மேல் முறையீடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை, இறுதியாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது, அப்போது பொன்முடி தரப்பில் ‘மனைவி விசாலாட்சிக்கு சொந்தமாகபல எக்கரில் விவசாய நிலமும், தனியாக வணிகமும் நடத்து வருவதால், அதில் கிடைத்த வருமானத்தையும், என் வருமானத்துடன் ஒன்றாக சேர்த்துள்ளனர். புலன்விசாரணை அதிகாரி இதைகவனத்தில் கொள்ளவில்லை ” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அந்த தீப்பில்,பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற தீப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த தீர்ப்பை ரத்து செய்கிறேன்.
2006 முதல் 2011ம் ஆண்டு வரை பொன்முடி,விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 486 ரூபாய்க்கு, அவரது வருமானத்தை விட அதிகமாக 64.90 % சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகி உள்ளது. இதனால் அவர்கள் குற்றவாளிகள் என முடிவு செய்கிறேன் ‘ என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.