அரசு பேருந்துகளில் பெண்கள் ஓசியில்தானே செல்கிறீர்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விழா ஒன்றி அவர் பேசியது பின்வருமாறு: ”4 ஆயிரம் குடும்ப கார்டு வாங்கி நீங்களா? இப்போது பெண்கள் எல்லாம் எப்படி பயணம் செய்கிறீர்கள். கோயம்பேடு போகவேண்டும் என்றால் ஓசி பேருந்தில்தான் செல்கிறீர்கள்” என்று கூறினார்.
இந்நிலையில் இவர் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கண்டம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து “மக்களுக்கான சலுகைகளை நீங்கள் அவர்களின் வரிப்பணத்திலிருந்து தான் தருகிறீர்கள், பெருத்து வழியும் கோபாலபுரத்து கஜானாவிலிருந்தல்ல! கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வக்கில்லாத @arivalayam, நம்பி வாக்களித்த பாமர மக்களை துச்சமாக மதித்து ஏளனம் பேசுவது கண்டிக்கத்தக்கது. ” என்று அவர் கூறியுள்ளார்.