அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், நவம்பர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், நவம்பர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

author-image
WebDesk
New Update
sadaw

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், நவம்பர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Advertisment

கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான  இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகிய  இடங்களிலும், அமைச்சரின் வீட்டு வாசலில் இருந்து கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துணை ராணுவப்படையினர் சோதனை நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டனர்.

அப்போது சென்னையில், அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற 13 மணி நேரம் சோதனையை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் 7 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்குத்தான் பொன்முடி அங்கிருந்து வீட்டுக் சென்றார்.

Advertisment
Advertisements

இந்நிலையில் தற்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், நவம்பர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: