Advertisment

அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7ல் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai HighCourt on freezing Ponmudi assets DVAC Tamil News

சொத்துக்குவிப்பு வழக்கு - ஏப்.7 இறுதி விசாரணை

திமுக அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறு ஆய்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7ஆம் தேதி முதல் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2002 ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் அவருடைய மனைவிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு வேலூருக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை ஆதாரங்கள் இல்லை எனக்கூறி பொன்முடி மற்றும் அவருடைய மனைவியை விடுதலை செய்து உத்தரவிட்டது.  

அவர்களது விடுதலை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertisment
Advertisement

அப்போது அந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கும் என்றும் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தினம் தோறும் இந்த விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளார். ஏப்ரல் 7 முதல் 17 ஆம் தேதிக்குள் இறுதி விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

Chennai High Court Ponmudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment