அமைச்சர் பொன்முடி மனைவி பெயரில் இயங்கிவரும் நிறுவனத்தில் கொள்ளை : காவல்துறையினர் விசாரணை

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
minister

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மனைவிக்கு கடலூரில் விஷால் மோட்டார்ஸ் என்ற பெயரில் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் உள்ளது. திருப்பாதிரிபுலியூரில் உள்ள அந்த விற்பனை நிறுவனத்தில் நேற்று விற்பனை முடிந்து இரவு கதவுகளை அடைத்துவிட்டு அதன் ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

இன்று காலை வழக்கம்போல் விற்பனை நிலையத்தை திறக்க ஊழியர்கள் வந்து பார்த்தபோது விற்பனை மையத்தின் பின்பக்க  கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் இருந்த 2 லாக்கர்கள் கொள்ளையர்களால் தூக்கிச் செல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அமைச்சர் பொன்முடி மற்றும் திருப்பாதிரிபுலியூர் காவல்துறைக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விற்பனை நிறுவனத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டு  இது குறித்து  வழக்குப் பதிவு செய்து விசாரணை  செய்து வருகின்றனர். அமைச்சருக்கு சொந்தமான நிறுவனத்தில் துணிச்சலாக கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

TAMILNEWS

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: