ஸ்டாலின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: ஆளுனருக்கு அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை

திமுகவை அஞ்ச வைக்கலாம் என்று ஆளுநர் நினைக்கலாம், முதல்வர் ஸ்டாலின் எதற்கும் அஞ்சமாட்டார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திமுகவை அஞ்ச வைக்கலாம் என்று ஆளுநர் நினைக்கலாம், முதல்வர் ஸ்டாலின் எதற்கும் அஞ்சமாட்டார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

திமுகவை அஞ்ச வைக்கலாம் என்று ஆளுநர் நினைக்கலாம், முதல்வர் ஸ்டாலின் எதற்கும் அஞ்சமாட்டார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற அனுப்பிய கோப்பு ஆளுநர் மாளிகையில் அனுமதி அளிக்காமல் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இது குறித்து அமைச்சர் ரகுபதி, கடந்த சில தினங்களுக்கு  முன்பு ஆளுநர் மாளிகைக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இதற்கு ஆளுநர் பதிலை ஊடங்களுக்கு அளித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறுகையில் “ நான் அனுப்பியிருந்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் வரவில்லை. பத்திரிக்கை செய்திதான் வந்திருக்கிறது. அதிமுகவின் 2 முன்னாள் அமைச்சர்களை ஆளுநர் காப்பாற்ற நினைக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் இருந்து உண்மைக்கு புறம்பான தகவல் வெளிவருகிறது. திமுகவுக்கு ஆளுநர் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆளுநர் இரட்டை வேடம் போடுகிறார். ஒரு புறம் நடவடிக்கை எடுக்க தடையாகவும் திமுக மீது நடவடிக்கை எடுக்கும்படியும் செயல்பட்டு திமுகவை அஞ்ச வைக்கலாம் என்று அவர் எண்ணுகிறார். ஆனால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை  எதற்கு அஞ்ச மாட்டார்.

Advertisment
Advertisements

ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நாம் மத்திய அரசிடம் தான் தெரிவிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இந்த விவகாரத்தில் உள்ளது. ஆளுநர் மாளிகையிலிருந்து வெளிவந்துள்ள பத்திரிக்கை செய்தி உண்மைக்கு புறம்பானது.

கே.சி வீரமணி  வழக்கை பொறுத்தவரை 12.09.22 விசாரணையின் முழு கோப்பையும் ஆளுநர்  மாளிகைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.  ஆனால் கொப்பு இதுவரை வரவில்லை என்று ஆளுநர் பொய்யான தகவலை கூறுகிறார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கை  பொறுத்தவரை 12/05/2023 அரசு இடம் இருந்து கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆளுநர் மாளிகையும் கோப்பில் கையெழுத்திட்டு  பெற்றிருக்கிறது. இதற்கான ஆதாரம் அரசிடம் உள்ளது.

தெலுங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளனர். நாங்களும்  அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். முதல்வரின் பொருமைக்கு எல்லை உண்டு , இதற்கு மேலும் முதல்வர் பொருமையாக இருக்க மாட்டார்”  என்று அவர் கூறினார்.  

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: