ராஜ்நாத் சிங் சென்னை வருகை: பொதுக்கூட்டம்- பா.ஜ.க நிர்வாகிகளுடன் சந்திப்பு

வருகின்ற ஜூன் 20ஆம் தேதி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னைக்கு வருகைத்தர விருக்கிறார்.

வருகின்ற ஜூன் 20ஆம் தேதி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னைக்கு வருகைத்தர விருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajnath Singh

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

வருகின்ற ஜூன் 20ஆம் தேதி தாம்பரம் இரும்புலியூரில் உள்ள டி.டி.கே., நகர் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகைத்தர உள்ளார்.

Advertisment

செவ்வாய்க்கிழமை (ஜூன் 20ஆம் தேதி) மாலை 4.30 மணிக்கு சென்னைக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று மாலை 4.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.55 மணிக்கு இரும்புலியூர் டிடிகே நகர் மைதானத்திற்கு செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் மாநில பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மேலும், மாநில பாஜக தலைவர் கே அண்ணாமலை மற்றும் பிற தலைவர்களுடன் கட்சியின் வளர்ச்சி மற்றும் மாநிலத்தில் அரசியல் நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் உரையாட இருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Rajnath Singh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: