/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-16T194603.368.jpg)
மதுரையை தமிழகத்தின் 2வது தலைநகரமாக்க வேண்டும் என்று வருவாய்த்துறை ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசுக்கு இன்று கோரிக்கை வைத்துள்ளார். அமைச்சரின் இந்த புதிய கோரிக்கை கவனததைப் பெற்றுள்ளது.
மதுரையில் இன்று அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக்கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைகூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தமிழகத்தின் 2ம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும். மதுரையை தமிழகத்தின் 2ம் தலைநகராக உருவாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களின் விருப்பமாக உள்ளது. மதுரையை 2-வது தலைநகரமாக அறிவிக்ககோரி அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையை தமிழகத்தின் 2வது தலைநகராக்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது தமிழகத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.