/indian-express-tamil/media/media_files/4fBq3m8ifGzyprBcxwbj.jpg)
சென்னை, பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் குத்தம்பாக்கம் பகுதியில் 5 லட்சம் சதுர அடியில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டு 2021-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெறுகிறது.
அண்மையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட நிலையில் மேற்கு மாவட்ட மக்கள் மற்றும் குறிப்பாக கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு செல்ல இந்த பேருந்து முனையம் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது, இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் பெங்களூர் செல்லும் மக்கள், ஐடி ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பேருந்து முனையம்
புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 130 பேருந்துகளை நிறுத்தி வைக்கும் வகையில் கட்டப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M. K. Stalin அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (13.7.2024) திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தின் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு (1/3) pic.twitter.com/l3DEC3APrW
— P.K. Sekar Babu (@PKSekarbabu) July 13, 2024
இந்நிலையில் இன்று (ஜூலை 13) குத்தம்பாக்கம் பேருந்து முனைய பணிகளை அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்" என்றார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.