Advertisment

தேங்கிய மழைநீர்... குடிநீர், மின்சாரம் இன்றி தவிப்பு... சேகர்பாபுவை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் சுற்றி தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்படவில்லை, குடிநீர், மின்சாரம் இல்லாமல் பல மணிநேரம் தவிப்பதாக வாக்குவாதம் செய்த பொதுமக்கள் அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
ppl protest Sekar babu

அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்னை வண்ணாரப்பேட்டையில் சுற்றி தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்படவில்லை, குடிநீர், மின்சாரம் இல்லாமல் பல மணிநேரம் தவிப்பதாக வாக்குவாதம் செய்த பொதுமக்கள் அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

சென்னை வண்ணாரப்பேட்டையில் குறைகளைக் கேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவிடம் குடியிருப்புகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்படவில்லை, குடிநீர், மின்சாரம் இல்லாமல் பல மணிநேரம் தவிப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னையின் புறநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் சென்னையில் பல்வேறு பகுதிகள் மழைநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்புப்படையினர் படகுகள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், படகுகள் மூலம் சென்று வீடுகளில் உள்ளவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், பால் பாக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. 

சென்னை மாநகராட்சி நிவாரண முகாம்கள் அமைத்து 20,000-க்கும் மேற்பட்ட மக்களைத் தங்க வைத்து உணவு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் பகுதி வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு இன்று (டிசம்பர் 6) காலை சென்னை வண்ணாரப்பேட்டையில் மழை பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளைக் கேட்கச் சென்றார். அப்போது, அப்பகுதி மக்கள், குடியிருப்புகளைச் சுற்றி தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்படவில்லை, குடிநீர், மின்சாரம் இல்லாமல் பல மணி நேரமாக தவிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், மாநகராட்சி ஊழியர்கள் வந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அமைச்சர் சேகர் பாபுவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, குடியிருப்புகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், குடிநீர், மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் அமைதியடைந்தனர்.

வண்ணாரப்பேட்டையில் சுற்றி தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்படவில்லை, குடிநீர், மின்சாரம் இல்லாமல் பல மணிநேரம் தவிப்பதாக வாக்குவாதம் செய்த பொதுமக்கள் அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment