தமிழகத்தில் அதிமுகதான் டாப்பு, மற்ற எல்லா கட்சியும் டூப்பு என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.
Advertisment
மதுரையில் நேற்று நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார். சென்னையில் பேரணி நடத்த உள்ள அழகிரி குறித்தும், அதிமுக கட்சி குறித்தும் இவர் பேசியது வைரலாகி உள்ளது. அதில், அதிமுக கட்சியும், ஆட்சியையும் வலுவாக உள்ளது. தமிழகத்தை அதிமுக சிறப்பாக வழிநடத்துகிறது. கட்சியை எடப்பாடி பழனிச்சாமி மிகவும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
அழகிரியால் திமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அழகிரிக்கு என்ன பலம் இருக்கிறது என்று இப்போது தெரியாது. அழகிரிக்கு ஆதரவு எவ்வாறு உள்ளது என்பது செப். 5ம் தேதிக்கு பின்னர் தெரியும். அழகிரியின் பேரணிக்கு பின்பே எல்லாம் தெரியும். திமுகவில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழகத்தில் அதிமுகதான் டாப்பு, மற்ற எல்லா கட்சியும் டூப்பு. திமுகவை உடைக்கும் எண்ணம் அதிமுகவுக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
முன்னதாக, நேற்றுமுன்தினம் திருவண்ணாமலையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "மெரினாவில் கேட்டவுடன் இடம் கொடுப்பதற்கு உங்கள் அப்பா என்ன தியாகியா? என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.