சமீபத்தில், மதுபானங்களை திருமண மண்டபங்களில் அனுமதிப்பது தொடர்பான சர்ச்சை நடைபெற்று வரும் நிலையில், டாஸ்மாக் மதுபானங்களை தானியங்கி இயந்திரங்கள் இயக்கப்படுவது, தமிழகத்தில் பெரும் சலசலப்பை கிளப்பியது.
இதைப்பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளதாவது: "டாஸ்மாக் வருமானத்தில் அரசு நடப்பதாக கூறுவது வேதனைக்குரியது.
மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்பகுதியில்தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த கடை செயல்படுகிறது.
சாலையிலோ, பொது இடங்களிலோ இந்த இயந்திரம் இருப்பது போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.
மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. டாஸ்மாக் நிறுவனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சி நடத்தியதுபோல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். நிர்வாக சீர்திருத்தம் செய்யும்போது, திரித்து கூறுகிறார்கள்.
தானியங்கி மது விற்பனை இயந்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள்", என்று சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை ஆய்வு செய்தபின் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil