Advertisment

உடைந்து அழுத செந்தில் பாலாஜி: கைது; மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
Jun 14, 2023 07:32 IST
New Update
உடைந்து அழுத செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Advertisment

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர்.

இந்நிலையில் துணை ராணுவத்தினர் நேற்று அவரது வீட்டில் குவிக்கப்பட்டனர். தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 20 மணி நேர விசாரணைக்கு பிறகு  செந்தில் பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது நெஞ்சுவலியால் கதறி அழுதார் செந்தில் பாலாஜி . மருத்துவர்களின் உதவியை கேட்டார்.

இதனையடுத்து ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.  ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம், சேகர்பாபு ஆகியோர் மருத்துவமனைக்கு உடனடியாக வந்தனர்.

ஓமந்தூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil  

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment