செந்தில் பாலாஜிக்கு 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: முதன்மை அமர்வு உத்தரவு

அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
minister senthil balaji

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 28 ஆம் தேதி வரை நீதிமன்றத் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் அறைக்கு சென்று சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி விசாரணை நடத்தினார்.

ரிமாண்ட் செய்வது குறித்து நீதிமன்றத்தில் இரு தரப்பும் வாதத்தை தொடரலாம் என நீதிபதி அல்லி தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே மருத்துவமனைக்கு வந்ததாக நீதிபதி கூறினார்.

Advertisment
Advertisements

இனி நீதிமன்றத்தில் வாதம் தொடர உள்ளது. வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ள இரு தரப்புக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி அறிவுறுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: