/indian-express-tamil/media/media_files/UAQxkPTtoGOAY606Rfb8.jpg)
அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
v-senthil-balaji | தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் 2023 ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு 10வது முறையாக வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதுவரை செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று (நவ.15) திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, கழுத்துப் பகுதியில் வலி மற்றும் உடல் வலி காணப்படுகிறது. இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு இரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நாளை புழல் சிறைக்கு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் நவ.20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.