பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சரா? செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு என அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு என அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

author-image
WebDesk
New Update
Tamil Nadu Minister Senthil Balaji talked about Velumani Arrest

Minister Senthil Balaji house besieges Tasmac bar owners protest: டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் கூறி, சென்னையில் மின்சாரத் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு டாஸ்மாக் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருவது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் சார்பாக பார் டெண்டர் விடுக்கப்பட்டது. டாஸ்மாக்குகளில் புதிதாக பார் அமைப்பதற்கு இந்த டெண்டர் எடுக்கப்பட்டு பலருக்கு டெண்டர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு நெருக்கமான சிலருக்கு டெண்டர் வழங்கியதாக பார் உரிமையாளர்கள் புகார் வைத்துள்ளனர். தங்களிடம் ஏற்கனவே இருந்த பார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய நபர்களுக்கு பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பார் உரிமையாளர்கள் புகார் வைக்கின்றனர்.

தங்களுக்கு பார் உரிமம் வழங்காமல் அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று பார் உரிமையாளர்கள் சங்கம் புகார் வைத்து உள்ளது. இதனால் இந்த டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

Advertisment
Advertisements

இந்தநிலையில் இன்று சென்னை, பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு பார் உரிமையாளர்கள் கிட்டத்தட்ட 100 பேர் ஒன்று கூடி செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

பொற்கால ஆட்சியில் ஒரு பொல்லாத அமைச்சரா… அமைச்சரே உங்களுக்கு கோடி.. எங்களுக்கு தெரு கோடி… காத்திடு காத்திடு 3 லட்சம் தொழிலாளர்களைக் காத்திடு என்ற வாசகங்கள் அடங்கிய போர்டுகளை வைத்துக்கொண்டு பார் உரிமையாளர்கள் அங்கு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

மேலும், நாங்கள் புகார் மனுவை கொடுக்க தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வந்தோம். ஆனால், எங்களை சரியாக நடத்தவில்லை. அதனால் தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். முதல்வர் தலையிட்டு இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji Chennai Tasmac Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: