minister-pk-sekar-babu | சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சேகர் பாபு பேட்டி
இது குறித்து அவர் மேலும், “வைகுண்ட ஏகாதசி தினத்தில் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்துத் தரப்படும். சொர்க்கவாசல் திறப்பன்று சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.
பொது தரிசனத்தில் மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். முன்வாசல் கோபுரம் வழியாக பொது தரிசனமும், பின்புற கோபுர வாசலில் சொர்க்க வாசல் தரிசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
தனிவரிசை
தொடர்ந்து, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அதிகாலை சொர்க்கவாசல் தரிசனம்
இதையடுத்து, சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 2.30 மணிக்கு
1500 பேருக்கும், 850 உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்களுக்கும் அனுமதி அனிக்கப்படும்” என்றார்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“